
NEET போராட்டத்தில் சர்ச்சை..! சனம் ஷெட்டியை மேடையிலிருந்து வெளியேற வைத்தது என்ன?
சென்னை நீட் போராட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க நடிகை சனம் ஷெட்டி தி.நகரில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு பேச முயன்றார். அப்போது, தன்னை நடிகர் விஜயின் ரசிகை என்றும், ஜனநாயகன் திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்த்ததாகவும் குறிப்பிட்டதைத் தொடர்ந்து சில மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து மேடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, சனம் ஷெட்டியிடம் இருந்த மைக் பறிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சனம் ஷெட்டி, கருத்துச் சுதந்திரம் மறுக்கப்பட்டதாக குற்றம்சாட்டியதுடன், எந்த அரசியல் நோக்கமுமின்றி மாணவர்களுக்கு ஆதரவாக மட்டுமே வந்ததாக விளக்கம் அளித்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.