
Wayanad Landslide
கேரள மாநிலம் வயநாடு கள்ளாடி பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது அங்கு மீண்டும் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, மீட்பு மற்றும் தேடுதல் பணிகளை தற்காலிகமாக நிறுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மோசமான வானிலை மற்றும் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால், மீட்புக் குழுவினரின் பாதுகாப்பு கருதி இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.