விஜய் நிச்சயமாக வாக்குகளை பிரிப்பார்...ஆனால் மீண்டும் ஸ்டாலின் முதலமைச்சர் ஆவார்! புகழேந்தி பேட்டி

Share this Video

ரஜினிகாந்தை விமர்சித்து ஒரு அரசியல் கட்சி நிர்வாகி பேசுகிறார் என்று ஆதவ அர்ஜுனாவை குறிப்பிட்ட அவர் அவருக்கு அவ்வாறு பேசுவதற்கு என்ன தேவை வந்தது என கேள்வி எழுப்பினார். தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவாரா என்ற கேள்விக்கு, தமிழக வெற்றி கழகம் நன்றாக தான் சென்று கொண்டிருந்தது ஆனால் கடந்த 10, 15 நாட்களாக கட்சியின் தாக்கம் குறைந்து கொண்டு வருகிறது என்றும் அந்தக் கட்சியில் இரண்டாம் கட்ட தலைவர்கள் சிலர் இருக்கிறார்கள் அவர்களுடைய எண்ணமும் கொள்கையும் வேறு யாரும் உள்ளே வந்து விடக்கூடாது என்று இருக்கிறது என தெரிவித்தார். மேலும் தற்பொழுது அனைத்து கட்சி இனிவரும் சென்னையில் ஏன் முகாமிடுக்கிறார்கள் என்று தெரியவில்லை சென்னையில் அதிக வாக்காளர்கள் இருக்கிறார்கள் என்று அவர்கள் எண்ணினாலும் சென்னை திமுகவின் கோட்டை என தெரிவித்தார். விஜய் வாக்குகளை நன்கு பிரிப்பார் Ball யை முதல்வர் ஸ்டாலினிடம் கொடுத்து விடுவார், ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சர் ஆவார் என புரட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் புகழேந்தி தெரிவித்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

Related Video