சட்டமன்றத்தின் மாண்பை குழிதோண்டி புதைத்திருக்கின்றார் முதல்வர் விஜய்! போராட்டத்தில் சேகர்பாபு பேச்சு

Share this Video

தமிழகச் சட்டப்பேரவையில் மறைந்த தலைவர் மு.கருணாநிதி மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறித்து முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தெரிவித்த கருத்துக்களுக்குக் கண்டனம் தெரிவித்து, திமுக சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை தாங்கிப் பேசிய திமுக மூத்த தலைவர் பி.கே. சேகர்பாபு, முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் பேசியது ஒரு மணி நேர சினிமா வசனம் போன்றது என விமர்சித்தார். மு.க.ஸ்டாலின் அவசரநிலைக் காலத்தில் (MISA) செய்த தியாகங்களையும், அவரது நேர்மையான அரசியல் பயணத்தையும் சிறுமைப்படுத்தும் வகையில் பேசப்பட்ட பேச்சு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றும், காயம்பட்ட சிங்கமாக இருக்கும் திமுக இதற்கான பதிலை அரசியல் களத்தில் தகுந்த முறையில் அளிக்கும் என்றும் அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.

Related Video