
விஜய் வருகையால் குலுங்கியது திநகர்.! ஆடி தள்ளுபடி கூட்டத்தை மிஞ்சிய மக்கள் கூட்டம்.!
தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சென்னையில் நடத்திய தேர்தல் பிரச்சாரம் ஒரு மாபெரும் திருவிழாவாகவே மாறியது. குறிப்பாக, தி.நகர் மற்றும் கோடம்பாக்கம் பகுதிகளில் அவர் மேற்கொண்ட 'வாக்குவேட்டை' அரசியல் வட்டாரத்தை உற்று நோக்க வைத்துள்ளது. ஆடி தள்ளுபடி காலங்களில் கூட காண முடியாத அளவுக்கு தி.நகர் பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது; மேம்பாலங்களின் மீது ஏறி நின்றபடி தொண்டர்கள் தங்கள் 'தளபதி'யை ஆரவாரத்துடன் வரவேற்றனர். "கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்க வந்தேன்யா" என்ற பாணியில் அவர் வீதி வீதியாகச் சென்றபோது, ஒட்டுமொத்த சென்னையும் ஒரு நிமிடம் ஸ்தம்பித்தது என்றே சொல்லலாம்.