எமோஷனலான எலெக்சனை இந்தியாவே பாத்திருக்காது.. நெல்லையில் விஜய் பிரச்சாரம்

Share this Video

நெல்லை மண்ணில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டத்தில் பேசிய விஜய், உணர்ச்சிப்பூர்வமாகவும் அதேசமயம் அரசியல் ரீதியாக அதிரடியாகவும் தனது கருத்துக்களைப் பதிவு செய்தார். "உங்களுக்கு நன்றி செலுத்தவே நான் இங்கு வந்துள்ளேன்" என நெகிழ்ச்சியுடன் தொடங்கிய அவர், இனி பொய் சொல்லி மக்களை ஏமாற்றப் போவதில்லை என்றும், பொய் வாக்குறுதிகளை நம்பி ஏமாற மாட்டேன் என்றும் சூளுரைத்தார். குறிப்பாக, வரும் தேர்தலில் போட்டி என்பது ஆளுங்கட்சியான திமுக-வுக்கும் தனது தவெக-வுக்கும் இடையேதான் என்பதை மிகவும் நேரடியாகவும் அழுத்தமாகவும் பதிவு செய்தார்.

Related Video