
ஆளுநரைச் சந்தித்தார் விஜய்: தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரல்!
தமிழக சட்டசபைத் தேர்தலில் 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், இன்று ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். 5 எம்.எல்.ஏ-க்களைக் கொண்ட காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்துள்ளதால், விஜய்யின் பலம் 113-ஆக உயர்ந்துள்ளது. பனையூர் அலுவலகத்திலிருந்து ஆளுநர் மாளிகை சென்ற அவர், புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் ஆளுநரைச் சந்தித்தார். பெரும்பான்மையை நிரூபிக்க 10 நாள் அவகாசம் கோரியுள்ள நிலையில், 100-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட பலமான எதிர்க்கட்சியைச் சமாளிப்பது விஜய்க்குப் பெரும் சவாலாக இருக்கும். விரைவில் அவர் முதல்வராகப் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது விஜய்யின் அரசியல் வாழ்வின் முக்கிய 'அக்னிப் பரீட்சையாக' கருதப்படுகிறது.