
அதிகார போதையில் திளைக்கும் போலீஸ்..சாத்தான்குளம் தீர்ப்பை ஒருபொருட்டாகவே மதிக்கவில்லை.. வேல்முருகன்
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே மருதம்புத்தூர் கிராமத்தில் வசிக்கும் மணிகண்டன் விவசாயத்துடன்யேறும் தொழிலும் செய்து வருகிறார். இதற்கிடையில் ஆலங்குளம் போலீசாருக்கு மருதம்புத்தூர் பகுதியில் கள் விற்பனை செய்வதாக தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து உதவி ஆய்வாளர் இசக்கிராஜா, காவலர்கள் மணிராஜ், கார்த்திக் ஆகியோருடன் அப்பகுதிக்கு சென்றுள்ளார். அங்குள்ள ஒரு பனை மரத்தில் பதநீர் எடுப்பதற்காக கணையம் வைத்துள்ளதை இசக்கி ராஜா அறிந்தார். உடனே மரத்தின் உரிமையாளரான மணிகண்டன் மற்றும் அவரின் தந்தை பெருமாள் சேட்டையும் அழைத்துக் கொண்டு பனைமரம் இருக்கும் பகுதிக்கு சென்றபோது, மணிகண்டனின் சகோதரரான சிவன் பொன்ராஜ் குளிக்க சென்றார்.