
வேளாங்கண்ணி மாதா கோயில் பெருவிழா ஆரம்பம்: வானை பிளந்த முழக்கங்களுடன் கொடியேற்றம்!
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. தஞ்சை மறைமாவட்ட ஆயர் முன்னிலையில் புனிதக் கொடி புனிதம் செய்யப்பட்டு, ஏற்றி வைக்கப்பட்டது. ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 8 வரை 11 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.