
வேடநத்தம் சிறுமி படுகொ**லை குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது, முதலமைச்சர் அவர்கள் உறுதியாக இருக்கிறார்
விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி - வேடநத்தம் ஊரைச் சேர்ந்த பள்ளி மாணவி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளைக் கண்டறியும் பணியில் காவல்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தமிழ்நாடு அரசு இயந்திரம் இந்த விஷயத்தில் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. மாணவியின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு நல்குங்கள். குற்றவாளிகள் அதிவிரைவில் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தரப்படும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதிலும், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை பெற்றுத் தருவதிலும் உறுதியாக இருக்கிறார்.
Related Video
Now Playing
Now Playing