கறை பதிந்த அமைச்சரைகளை அனுப்பி மக்களை அவமரியாதை செய்திருக்கிறது திமுக ! வானதி சீனிவாசன் பேட்டி

Share this Video

தமிழக அரசியல் கட்சி களம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது எனவும், கோவையில் முன்னாள் ஊழல் அமைச்சர் , இந்நாள் தியாகியை கோவை தெற்கு தொகுதிக்கு அறிவித்து இருக்கிறார்கள் என தெரிவித்த அவர், தமிழக அரசியல் வரலாற்றிலேயே ஜெயிலில் ஒரு அமைச்சரை வைத்திருந்த பெருமை திமுகவிற்கு உண்டு என தெரிவித்தார். கடந்த முறை போல பத்துக்கு பத்து தொகுதிகளை வெற்றி பெறுவோம் என தெரிவித்த அவர், இதுபோன்ற ஊழல் கறை பதிந்த அமைச்சரை கோவைக்கு அனுப்பி மக்களை அவமரியாதை செய்திருக்கிறது திமுக என தெரிவித்தார். விஜய் இன்று தான் வேட்பாளர் பட்டியலை அறிவித்திருக்கிறார், 10 நாள் கழித்து பாருங்கள் அவர்கள் எங்கு இருக்கின்றார்கள் என்று என தெரிவித்த அவர், அவர்களின் தேர்தல் அரசியல் என்பது வேறு எனவும், அவர்களுக்கு இது முதல் தேர்தல் என்பதால் ஒரு ஆர்வம் இருக்கலாம். அவர்கள் தலைவருக்கும் இருக்கலாம் என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

Related Video