முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி: விவசாயிகளுக்கு நேரடியாகக் கிடைக்கும் வைகை அணை வண்டல் மண்!

Share this Video

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் கட்டப்பட்டு 70 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இப்பணிகளைத் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் நேரில் ஆய்வு செய்தார். தற்போது அணையில் 18% முதல் 20% வரை வண்டல் மண் படிந்துள்ளதால், நீர்க்கொள்ளளவு குறைந்துள்ளது. இதற்குத் தீர்வாக, மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதியைப் பெற்று, அடுத்த 9 ஆண்டுகளுக்குள் தூர்வாரும் பணிகளை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் அணையின் கொள்ளளவு 20% அதிகரிக்கும். மேலும், முறைகேடுகளைத் தடுத்து விவசாயிகளுக்கு இலவசமாக வண்டல் மண் வழங்க 4,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Related Video