
சனாதனத்தை மீண்டும் சீண்டிய உதயநிதி.. ஜோதிடருக்கு அரசு பதவி கொடுத்த விஜய்.. மோதல் ஆரம்பம்!
Udhayanidhi vs CM Vijay: சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என உதயநிதி சட்டப்பேரவையில் பேசியுள்ளார். இது ஒருபக்கம் சர்ச்சையாக, மறுபக்கம் ஜோதிடருக்கு விஜய் அரசு பதவி கொடுத்ததும் சர்ச்சையாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தவெக சாதனை வெற்றி பெற்ற நிலையில், நடிகரும், அக்கட்சியின் தலைவருமான விஜய் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். எதிர்க்கட்சித் தலைவராக திமுகவின் உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார். இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவராக முதன்முறையாக உரையாற்றிய உதயநிதி, ''தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும், வளர்ச்சிக்காகவும் நாம் எல்லாரும் சேர்ந்து ஒன்றாகப் பயணிப்போம். எது எப்படியானாலும் திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைப்படி எல்லோருக்கும் எல்லாம் கிடைப்பதை உறுதி செய்கின்ற வகையில் எதிர்க்கட்சி வரிசையில் இருந்து நாங்கள் நிச்சயம் செயல்படுவோம்'' என்றார்.
Add Asianetnews Tamil as a Preferred Source
