
சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடத் தனது வேட்புமனுவைத் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் முறைப்படி தாக்கல் செய்தார். வேட்புமனுத் தாக்கல் முடிந்து அவர் அலுவலகத்திலிருந்து வெளியேறியபோது, அங்கிருந்த தொண்டர்கள் மற்றும் ஊடகவியலாளர்களிடையே மிகுந்த பரபரப்பும் உற்சாகமும் நிலவியது.இரண்டாவது முறையாக இதே தொகுதியில் போட்டியிடும் அவர், மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று புதிய சரித்திரம் படைப்பார் என்ற ஆதரவாளர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையும் வெளிப்பட்டன.