
விவசாயிகளை ஏமாற்றும் அரசியல்வாதிகள்!" – மேகதாது அணைக்கு எதிராக திருச்சியில் விவசாயிகள் போராட்டம்!
திருச்சி காவிரியாற்றில், மேகதாது அணை கட்ட முயலும் கர்நாடக அரசுக்கும், அதற்கு முட்டுக்கட்டை போடாத மத்திய அரசுக்கும் எதிராக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் ஆற்றில் இறங்கி மணலில் புதைந்து வினோத போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தை பாலைவனமாக்க முயற்சிப்பதாக மத்திய, மாநில அரசுகள் மீது விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்