
5 நாள் வேலை வாரத்தை அமல்படுத்தக் கோரி திருச்சியில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் !
வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பான UFBU (United Forum of Bank Unions) அழைப்பு விடுத்துள்ள நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, திருச்சியில் வங்கி ஊழியர்கள் தீவிர ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே வேலை என்பதை உடனடியாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் (AIBOC) துணைப் பொதுச்செயலாளர் தியாகராஜன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, வங்கி ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான 5 நாள் வேலை வார முறையை அரசு விரைந்து அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.