வாக்கு சாவடிக்கு வந்த விஐபிக்கள்..! வாரிசையில் நின்று வாக்களித்த பிரபலங்கள்.!

Share this Video

விஐபிக்களின் வருகையால் வாக்குச் சாவடிகள் களைகட்டிய நிலையில், திரைத்துறையைச் சேர்ந்த முன்னணி நட்சத்திரங்கள் பலரும் முன்மாதிரியாகத் திகழ்ந்தனர். நடிகை திரிஷா மிக எளிமையான தோற்றத்தில் வந்து வரிசையில் நின்று தனது வாக்கைச் செலுத்தினார். அதேபோல், அதிகாலையிலேயே வருகை தந்த நடிகர் தனுஷ், எவ்வித விஐபி சலுகையையும் எதிர்பார்க்காமல் பொதுமக்களோடு வரிசையில் காத்திருந்து ஜனநாயகக் கடமையை ஆற்றினார். 'ஆக்சன் கிங்' அர்ஜுன் தனது குடும்பத்துடன் வந்து பொறுமையாக வரிசையில் நின்று வாக்களித்ததோடு, இளைஞர்களுக்கு உத்வேகம் அளித்தார். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அங்கிருந்த முதியவர்களிடம் உரையாடியபடி வரிசையில் நின்று வாக்களித்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. நடிகர் ஜீவாவும் வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்ததோடு, அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தினார். இவ்வாறு தங்களின் புகழைப் பொருட்படுத்தாமல், சாமானிய மக்களுடன் வரிசையில் நின்று இந்த பிரபலங்கள் வாக்களித்தது ஜனநாயகத்தின் வலிமையை உணர்த்துவதாக அமைந்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

Related Video