திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் ! செங்கோட்டையன் விளக்கம்

Share this Video

திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்த முக்கிய ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குப் பிறகு, தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் கே.ஜி.அருண்ராஜ் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் எஸ்.கமலி ஆகியோர் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, திருப்பூரின் கழிவு மேலாண்மை மற்றும் சாயக்கழிவுப் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண்பது குறித்தும், மலைக்கிராம மக்களின் தேவைகளை விரைந்து முடிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக அமைச்சர்கள் தெரிவித்தனர். மேலும், வெளிப்படையான, ஊழலற்ற நிர்வாகத்தை மக்களுக்கு வழங்குவதே தங்களது நோக்கம் என்றும் அவர்கள் இச்சந்திப்பில் உறுதிபடக் கூறினர். அதன் முக்கியக் காட்சிகள் இந்த வீடியோவில்...

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Related Video