
தூத்துக்குடி கடலோரத்தில் நெத்திலி கருவாடு சீசன் ஆரம்பம் – குவியும் மீன்கள், பரபரப்பில் மீனவர்கள்!
துறைமுகத்தை சுற்றியுள்ள கடலோரப் பகுதிகளில் நெத்திலி மீன்களை உலர்த்தி, கருவாடாக மாற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பிடிக்கப்படும் நெத்திலி மீன்களை முறையாக உப்பு போட்டு, கடற்கரை மணலில் உலர வைக்கும் தொழிலில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். சந்தையில் இதற்கு நல்ல வரவேற்பு உள்ள நிலையில், சீசன் மற்றும் தொழிலாளர்களின் நிலைப்பாடு குறித்து மீனவர்கள் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.