விசிகவின் அதிரடி முடிவு

Share this Video

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக் குழுக் கூட்டம் இன்று மாலை நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதில் தற்போதைய அரசியல் நெருக்கடிகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். கட்சியின் தலைவராக முடிவுகளை எடுக்கும் அதிகாரம் தமக்கு வழங்கப்பட்டிருந்தாலும், சக நிர்வாகிகளின் கருத்துக்களைக் கேட்டறிந்து முடிவெடுப்பதே தமது கடமை என்று அவர் குறிப்பிட்டார். இதற்கிடையில், "மக்களின் தீர்ப்பை திமுக மதிக்கிறது; தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆட்சியமைக்க இடையூறாக இருக்க மாட்டோம்" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளதைச் சுட்டிக்காட்டிய திருமாவளவன், விசிக இன்னும் எந்த இறுதி முடிவையும் எடுக்கவில்லை என்பதைத் தெளிவுபடுத்தினார். இன்று மாலை நடைபெறும் உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் விரிவாக விவாதித்த பிறகு, எடுக்கப்பட்ட முடிவுகளை நாளை காலை செய்தியாளர் சந்திப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Related Video