
“விமர்சனங்களுக்கு செவி சாய்க்க வேண்டாம்” - கட்சியினருக்கு திருமாவளவன் அறிவுரை!
சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் திருமாவளவன் பல முக்கிய கருத்துகளை தெரிவித்துள்ளார். “அமைச்சரவையில் அதிகாரத்தை பகிர்ந்து கொண்டுள்ளோம். இன்னும் வாக்கு வங்கியை நிரூபிக்காத கட்சிக்கும் அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார். மேலும், “பதவிக்காக நாம் ஓடமாட்டோம். அடிமட்ட தொண்டன் அமைச்சர் ஆனது வரலாற்றுச் சம்பவம். யார் எவ்வளவு விமர்சித்தாலும் அதற்கு செவி சாய்க்க வேண்டாம்” எனக் கட்சியினருக்கு அறிவுரை வழங்கினார். கூட்டணிக்குள் சமநிலை மற்றும் தொண்டர்களின் உழைப்புக்கு மதிப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதையே தனது பேச்சின் மூலம் திருமாவளவன் வலியுறுத்தினார்.
Add Asianetnews Tamil as a Preferred Source
