
என்னை வைத்தே திமுக கூட்டணியை உடைக்கப் பார்த்தார்கள்! – தொல். திருமாவளவன் அதிரடி பேட்டி!
திருச்சியில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, "என்னை வைத்தே திமுக கூட்டணியை உடைக்கப் பலர் சதித் திட்டம் தீட்டினர்" என்ற அதிரடிப் புகாரை முன்வைத்தார். மேலும், வருகிற ஆகஸ்ட் 17-ஆம் தேதி விசிக சார்பில் பிரம்மாண்ட 'தமிழர் எழுச்சி மாநாடு' நடைபெற உள்ளதாகவும், தமிழக அரசின் வெள்ளை அறிக்கை வெளியீடு மற்றும் அரசியல் நகர்வுகள் குறித்தும் தனது அரசியல் நிலைப்பாடுகளை வெளிப்படையாகவும் ஆக்ரோஷமாகவும் இந்த பிரஸ் மீட்டில் பதிவு செய்தார்.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்