
கலைஞரால் எம்ஜிஆருக்கு வந்த நெருக்கடி.! நீதி வேண்டி 200 கி.மீ. நடந்தே சென்ற கருணாநிதி.!
அரசு மறைக்க முயன்ற அந்த 288 பக்க அறிக்கையின் நகலை, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதி அதிரடியாக வெளியிட்டார். அதில், அது தற்கொலை அல்ல, கொலை என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. "அறிக்கை கலைஞரின் கைக்கு எப்படி கிடைத்தது?" என்று தமிழக அரசியலே திகைத்து நின்றது. அதிகாரிகள் பலர் கைது செய்யப்பட்டனர், பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ஆனால், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க அதிமுக அரசு தயங்கியது.