ஒரே தொகுதியில் 1033 வேட்பாளர்கள்...அரண்டுபோன தேர்தல் ஆணையம்; தமிழ்நாட்டில் இப்படி ஒரு தொகுதியா?

Share this Video

தமிழ்நாட்டில் தேர்தல் திருவிழா களைகட்டி உள்ள நிலையில், இங்கு ஒரே தொகுதியில் 1033 வேட்பாளர்கள் போட்டியிட்ட் ஒரு அபூர்வ சம்பவத்தை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க உள்ளோம். இந்தியாவில் தேர்தல் என்பதே ஒரு திருவிழா தான். விதவிதமான சம்பவங்கள், சுவாரஸ்யமான செய்திகள் என தேர்தல் காலமே மிகவும் பரபரப்பாக இருக்கும். தற்போது நாம் பார்க்க இருப்பதும் அப்படி ஒரு சம்பவத்தை தான். நம்ம தமிழ்நாட்டில் உள்ள ஈரோடு மாவட்டத்தில் மொடக்குறிச்சி என்கிற சட்டமன்ற தொகுதியில் கடந்த 1996-ம் ஆண்டு தேர்தலின் போது நடைபெற்ற ஒரு ருசீகர சம்பவத்தை பற்றி தான் பார்க்க உள்ளோம். இந்த தொகுதியில் இருந்து மட்டும் அந்த தேர்தலில் 1033 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டிருக்கிறார்கள் என்று சொன்னால் நம்ப முடிகிறதா... நீங்க நம்பலேனாலும் அதுதான் நிஜம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

Related Video