
நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள் : ஆகஸ்ட் 31-க்குள் அதிரடி மீட்பு! – அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி !
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்பதற்காக தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், முதற்கட்ட மீட்புப் பணிகள் நிறைவடைந்து ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் தமிழ்நாட்டைச் சேர்ந்த 219 பயணிகள் பாதுகாப்பாக சென்னை திரும்ப உள்ளதாக தெரிவித்துள்ளார்.