
"கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் சோகமாக இருக்க தேவையில்லை" எதற்கும் தொய்வடைய வேண்டாம் - ஸ்டாலின் !
தஞ்சாவூரில் நடைபெற்ற திமுக தொண்டரின் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் எதற்கும் தொய்வடையவோ அல்லது சோகமாக இருக்கவோ தேவையில்லை என்றும், தமிழ்நாட்டில் மக்களுக்கான நற்பணிகளைச் செய்யும் பொறுப்பில் தற்போதும் நாம்தான் ஆட்சியில் இருக்கிறோம் என்றும் குறிப்பிட்டார். மணமக்கள் இருவரும் சுயமரியாதை மற்றும் பகுத்தறிவுச் சிந்தனையோடு தங்களது இல்லற வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் தொடர வேண்டும் எனவும் அவர் வாழ்த்திப் பேசினார்.
Add Asianetnews Tamil as a Preferred Source
