
தமிழகத்தில் ஒரு பொய்யான போரை உருவாக்குகிறார் முதல்வர் ஸ்டாலின் ! தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி
மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி பாஜக வேட்பாளரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தொகுதி மறுவரையறை (Delimitation) விவகாரத்தில் திமுக அரசு எடுத்துள்ள நிலைப்பாட்டையும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள கருப்புக்கொடி போராட்டத்தையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.