
Delimitation சட்டத்திற்கு எதிராக நாளை கருப்புக்கொடி ஏந்தி போராடுவோம்! முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு
தருமபுரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் அவர்கள், 2026 அரசியலமைப்பு திருத்தச் சட்டம் மற்றும் தொகுதி மறுவரையறை (Delimitation Bill) குறித்து மத்திய அரசை கடுமையாகச் சாடினார். இந்த சட்டத்திருத்தம் தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் முயற்சியாகும் என்றும், இது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என்றும் அவர் குறிப்பிட்டார். இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் வீடுகளில் நாளை கருப்புக்கொடி ஏந்தி போராட அவர் வேண்டுகோள் விடுத்தார்.