
MLA - களுக்கு அரசு கார் வேண்டாம்! – நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வலியுறுத்திய சௌமியா அன்புமணி!
தமிழ்நாடு சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாமக தலைவர் சௌமியா அன்புமணி, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு (MLA) அரசு சார்பில் புதிய கார்கள் வழங்கும் திட்டத்தையும், அதற்கான மாதாந்திரப் படியையும் நிராகரிப்பதாக அறிவித்தார். பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த அரசு வாகனங்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறிய அவர், இதற்காக ஒதுக்கப்படும் மக்கள் நிதியை மாநிலம் முழுவதும் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைப்பதற்கும், விவசாயிகளின் நலனுக்கும் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், ரேஷன் பொருட்கள் விநியோகத்தில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், பொதுமக்களின் சிரமத்தைக் குறைக்கவும் ஆன்லைன் முன்பதிவு முறையைச் செயல்படுத்த அரசு முன்வர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.