
நீட் தேர்வை ரத்து செய்...! மத்தியக் கல்வி அமைச்சரின் பதவியைப் பறிக்கக் கோரி SFI, DYF-யினர் முழக்கம்!
திருச்சியில் நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரத்தைக் கண்டித்து, மாணவர் சங்கமான SFI மற்றும் இளைஞர் அமைப்பான DYFI சார்பில் தலைமை அஞ்சலகம் அருகே தீவிர சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. ஒன்றியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்திப் போராட்டக்காரர்கள் மத்திய அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.