'விசில் புரட்சி' மூலம் ஆட்சியைப் பிடிப்போம் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம்

Share this Video

திண்டுக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகி செங்கோட்டையன், தமிழகத்தின் எதிர்காலத்திற்கு விஜய்யின் தொலைநோக்குப்பார்வை கொண்ட தலைமை மிக அவசியம் என தெரிவித்தார். கட்சியின் அடையாளமாகத் திகழும் "விசில் புரட்சி" மக்களிடையே மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும் என்றும் வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்றும் கூறினார். பசுமை, எரிபொருள், இன மற்றும் சமதர்மப் புரட்சிகளை முன்னெடுத்துச் செல்லும் என்றும் உறுதிபடத் தெரிவித்த செங்கோட்டையன் தற்போதைய அரசியல் சவால்களை முறியடித்து, எதிர்க்கட்சிகளுக்கு எவ்வித வாய்ப்பும் தராமல் தவெக மிகப்பெரிய தேர்தல் வெற்றியைப் பதிவு செய்யும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

Related Video