
பனையூரில் அவமானம்.. அறிவாலயத்தில் தஞ்சம்? செங்கோட்டையனின் ‘சைலண்ட்’ மூவ் - அதிர்ச்சியில் விஜய்..!
சென்னையில் பெரம்பூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில், செங்கோட்டையன் மிக மோசமாக அவமானப்படுத்தப்பட்டதாகத் தகவல்கள் கசிகின்றன. விஜய்க்கு அடுத்த இடத்தில் இருக்கும் புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையனை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்றும், மேடை நாகரிகம் கூட இல்லாமல் அவர் ஓரங்கட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. "அரசியல் அரிச்சுவடியே தெரியாதவர்கள் எல்லாம் அண்ணனை அவமானப்படுத்துவதா?" என கொங்கு மண்டல ஆதரவாளர்கள் இப்போதே போர்க்கொடி தூக்கிவிட்டனர்.