கோட்டையில் கொடியேற்றுவார் விஜய்...வெற்றிக்கொடி உயரப்பறக்கும்.! அதிரடி விசில் அடித்த செங்கோட்டையன்

Share this Video

தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், சென்னை எழும்பூரில் தொண்டர்கள் மத்தியில் எழுச்சியுரை ஆற்றினார். "மக்களுக்காக நாளைய தீர்ப்பை எழுதப்போவது தலைவர் விஜய் தான்" என்று அப்போது நம்பிக்கையுடன் தெரிவித்தார். தமிழக அரசியலில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோருக்குப் பிறகு, மாநிலத்தை ஆளும் வல்லமை மிக்க ஒரே சக்தியாக விஜய் உருவெடுத்துள்ளதாக அவர் புகழாரம் சூட்டினார். மேலும், கட்சியின் தேர்தல் சின்னமான 'விசில்' சின்னத்தை முன்னிறுத்தி, 2026-ல் புனித ஜார்ஜ் கோட்டையில் விஜய்யின் வெற்றிக்கொடி பறப்பது உறுதி என்பதைத் தனது பாணியில் விசில் அடித்து உற்சாகமாக வெளிப்படுத்தினார். 234 தொகுதிகளிலும் கட்சியைப் பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவரது இந்தப் பேச்சு, தற்போது சமூக வலைதளங்களில் தொண்டர்களால் பெரிதும் பகிரப்பட்டு வருகிறது.

Related Video