சாத்தான்குளம் வழக்கில் 9 காவலர்களுக்கு மரண தண்டனை ! செல்வப்பெருந்தகை வரவேற்பு

Share this Video

மதுரை நீதிமன்றத் தீர்ப்பு குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, "சாத்தான்குளம் தந்தை மற்றும் மகன் உயிரிழப்பு விவகாரத்தில் 9 காவலர்களுக்கும் மரண தண்டனை வழங்கப்பட்டிருப்பது, சட்டம் தன் கடமையைச் சரியாகச் செய்துள்ளது என்பதையே காட்டுகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் நடந்த இந்த மனிதாபிமானமற்ற செயலுக்கு, தற்போது நீதி கிடைத்துள்ளது. சீருடை அணிந்தவர்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற எண்ணத்தை இந்தத் தீர்ப்பு அடியோடு மாற்றும். அப்பாவி உயிர்களைப் பறிப்பவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை மணி. இந்த வழக்கை நேர்மையாக நடத்தி, குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை கிடைக்கப் பாடுபட்ட தற்போதைய தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் நீண்ட காலப் போராட்டத்திற்கு இன்று உரிய நீதி கிடைத்துள்ளது," என்று ஆவேசமாகவும் உணர்ச்சிகரமாகவும் தெரிவித்தார்.

Related Video