ஊதிய உயர்வு கோரி கொதிக்கும் தூய்மைப் பணியாளர்கள்: போராட்டக் களத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா !

Share this Video

ஊதிய உயர்வு மற்றும் பணிச் சலுகைகளை உடனடியாக வழங்கக் கோரி சென்னைப் பெருநகர மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் கடந்த 15 நாட்களாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அவர்களின் நியாயமான கோரிக்கைகளைக் கேட்டறிந்து உடனடித் தீர்வு காண்பதற்காக அமைச்சர்கள் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர். நிர்மல் குமார் மற்றும் ராஜ் மோகன் ஆகியோர் நேரடியாகப் போராட்டக் களத்திற்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தூய்மைப் பணியாளர்களின் உரிமைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்துத் தீவிரமாக உரையாற்றி, அவர்களின் நலனுக்கான அரசின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார்.

Related Video