எடப்பாடிக்கு அதிர்ச்சி : பதவிகளை துறந்து போர்க்கொடி தூக்கிய எஸ்.பி.வேலுமணி மற்றும் சீனியர்கள் !

Share this Video

அதிமுக முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி, கட்சித் தலைமைக்கு அனுப்பியுள்ள கடிதம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அண்மையில் நடைபெற்ற முக்கிய கட்சி கூட்டங்கள் குறித்து தங்களுக்கு முறையான தகவல் தெரிவிக்கப்படாததால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, அவரும் விஸ்வநாதன், தங்கமணி, அன்பழகன் போன்ற மூத்த தலைவர்களும் தங்களது தற்போதைய கட்சிப் பதவிகளைத் துறந்துவிட்டு, சாதாரண தொண்டர்களாகத் தொடர விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர். எம்.ஜி.ஆர் மற்றும் அம்மா காலத்து மூத்த நிர்வாகிகளின் பங்களிப்பை கட்சித் தலைமை மதிக்க வேண்டும் என்றும், அடிமட்ட தொண்டர்களின் கவலைகளைப் போக்க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Related Video