
தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது நடக்கனும் அந்த அடிப்படையில் தான் சசிகலா உடன் கூட்டணி! ராமதாஸ் பேட்டி
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுவதால் அரசியல் கட்சிகள் கூட்டணிகளை இறுதி செய்து வேட்பாளர்கள் தேர்வில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பாமக அண்புமணி தரப்பு தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்த நிலையில் ராமதாஸ் தரப்பு பாமக அனைத்திந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கட்சியுடன் இணைந்துள்ளது. தைலாபுரம் இல்லத்தில் சசிகலா ராமதாசை சந்தித்து இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பேசினர். அப்போது புதுச்சேரி தமிழகத்தில் இணைந்து போட்டியிடுவதாக தெரிவித்து கூட்டணிக்கான கையொப்பமிட்டனர். கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட சசிகலா ராமதாஸ் இல்லத்திலையே பாமக கெளரவ தலைவர் ஜி கே மணி, செயல்தலைவர் ஸ்ரீகாந்தி உடன் சசிகலா உணவு உட்கொண்டு கூட்டணியை இறுதி செய்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அதனை தொடர்ந்து ராமதாஸ் சசிகலா கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ராமதாஸ் . சசிகலா தொடங்கியுள்ள அ இ பு த ம மு கழக கட்சியுடன் இணைந்து சட்டமன்ற தேர்தலை சந்திப்பது என கூட்டணிக்கு கையொப்பம் இடப்பட்டுள்ளதாகவும் கொள்கை அளவில் உறுதியாக இருக்கின்ற கட்சிகள் எங்களோடு வரலாம் சசிகலா அம்மையாரோடு இணைந்து கூட்டணியை இறுதி செய்ய உள்ளதாகவும் விருப்பம் தெரிவிப்பவர்கள் தெரிவிக்கலாம் என்றும் பாமக 235 தொகுதிகளிலும் போட்டியிடும் என கூறினார். தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது நடக்கனும் அந்த அடிப்படையில் தான் கூட்டணி அமைக்கபட்டுள்ளதாகவும் சில நேரங்களில் சில தாமங்கள் கூட்டணி அமைப்பதில் ஏற்படும் அந்த வகையில் கூட்டணி அமைந்துள்ளதாகவும் வெற்றி கூட்டணியாக இந்த கூட்டணி அமையுமெனவும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.