ரஜினியை அவதூறாக பேசிய ஆதவ் அர்ஜுனா நாவை அடக்கிக் கொள்ள வேண்டும் ! ஜினி ரசிகர்கள் ஆவேச பேட்டி

Share this Video

சூப்பர் ஸ்டார் ரஜினியை அவதூறாக பேசிய ஆதவ் அர்ஜுனா நாவை அடக்கிக் கொள்ள வேண்டும் த.வெ.க.கட்சித் தலைவர் விஜய் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் . மீறினால் வரும் சட்டமன்றத் தேர்தலில் ஆதவர் அர்ஜுனா போட்டியிடும் தொகுதியில் சாதாரண ஒரு ரஜினி ரசிகனை நிறுத்தி அவரை தோற்கடிக்கச் செய்வோம். இதே நிலை நீடித்தால் தமிழகம் முழுவதும் விஜய் கட்சி பங்கேற்கும் கூட்டணியை எதிர்த்து ரஜினி ரசிகர்கள் தேர்தல் பணி புரியும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள் . 1996 ஆம் ஆண்டு ஏழு நிமிட பேட்டியில் தமிழ் மாநில காங்கிரஸ் என்ற கட்சியை உருவாக்கி 40 சட்டமன்ற தொகுதியை கைப்பற்ற செய்தது ரஜினி வாய்ஸ் . அப்போதைய ஆட்சி அமைவதற்கு காரணமாக இருந்தவரும் ரஜினி .ரஜினியின் புகழுக்கு களங்கம் விளைவிக்க நினைத்தால் லாட்டரி சீட்டு வியாபாரியை கசக்கி பிழிந்து விடுவோம் . என மதுரையில் ரஜினி ரசிகர்கள் ஆவேச பேட்டி

Related Video