பிறந்த நாளில் வாழ்த்து மழையில் நனைந்த பிரேமலதா விஜயகாந்த் தொண்டர்கள் புடைசூழ கேக் வெட்டி கொண்டாட்டம்

Share this Video

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் உற்சாகமான கொண்டாட்டங்கள் நடைபெற்றன. கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகத் திரண்டு வந்திருந்த நிலையில், "வாங்க வாங்க" என்ற வரவேற்பு முழக்கங்களுடன் அலுவலகமே விழாக்கோலம் பூண்டிருந்தது. இந்த நிகழ்வில், பிரேமலதா விஜயகாந்த் தொண்டர்கள் சூழ கேக் வெட்டித் தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். அப்போது அவருடைய மகன்கள் சண்முக பாண்டியன் மற்றும் விஜய பிரபாகரன் வாழ்த்து தெரிவித்தனர்.

Related Video