
பேரவையில் பிரேமலதா விளாசல்: விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யாத அரசுக்கு கண்டனம்!
தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் தேமுதிக பொதுச்செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பிரேமலதா விஜயகாந்த் உரையாற்றினார். மேகதாட்டு அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்க அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பிரதமரை நேரில் சந்திக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், மழை நீரால் பாழாகும் நெல் மூட்டைகளைப் பாதுகாக்கக் பாதுகாப்புக் கிடங்குகளை அமைக்காதது, விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யாதது மற்றும் மின்வெட்டுப் பிரச்சினைகள் குறித்து தமிழக அரசைக் கடுமையாகச் சாடினார்.