மதுரையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை ! பல்வேறு இடங்களில் கடும் வெள்ளப்பெருக்கு !

Share this Video

மதுரையில் நேற்று இரவு முழுவதும் பெய்த பலத்த கனமழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் கடும் வெள்ள நீர் தேங்கியுள்ளது. குறிப்பாக, நகரின் மிக முக்கியமான பகுதியான பெரியார் பேருந்து நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சாலைகளில் முழங்கால் அளவிற்குத் தண்ணீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மாநகராட்சி பணியாளர்கள் மோட்டார்கள் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்தத் திடீர் கனமழையினால் மதுரையின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது.

Related Video