
ஒரு தலைமுறை மாற்றத்தை உருவாக்குவதே எங்கள் இலக்கு... அதிகாரத்தைக் கைப்பற்றுவது எங்கள் நோக்கமல்ல...
அதிகாரத்தைக் கைப்பற்றுவது எங்கள் நோக்கமல்ல, ஒரு தலைமுறை மாற்றத்தை உருவாக்குவதே எங்கள் இலக்கு" என்று முழங்கிய சீமான், படித்த இளைஞர்களைச் சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். அரசுப் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளை உலகத் தரத்திற்கு உயர்த்துவதன் மூலம் மட்டுமே சாமானிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியும் என்றும், அதற்கு விவசாயி சின்னத்தில் வாக்களித்துத் தங்களை ஆதரிக்க வேண்டும் என்றும் அவர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார். தொண்டர்களின் ஆரவாரம் மற்றும் பொதுமக்களின் வரவேற்புக்கு மத்தியில், இந்தத் தேர்தல் மாற்றம் தேடும் எளிய மக்களின் குரலாக இருக்கும் என சீமான் தனது பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.