
ஆந்திரா, தெலுங்கானாவில் கனமழை வீசும் புயல் காற்று: 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை !
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களில் வானிலை திடீரென மாறியுள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு இவ்விரு மாநிலங்களிலும் பரவலாகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஹைதராபாத் உட்பட 6 முக்கிய மாவட்டங்களுக்கு பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கான 'ஆரஞ்சு அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் மற்றும் பயணிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.