
கனிமொழி எம்.பி-யின் காரை நிறுத்திச் சோதனையிட்ட அதிகாரிகள்.! வாகனச் சோதனையின் போது நடந்ததென்ன?
சிவகங்கையில் தேர்தல் பரப்புரை மேற்கொள்வதற்காக சென்ற திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழியின் வாகனத்தை, தேர்தல் பறக்கும் படையினர் வழிமறித்துச் சோதனை செய்தனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், வழக்கமான கண்காணிப்புப் பணியின் ஒரு பகுதியாக இந்தச் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அங்கிருந்த செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் இந்த நிகழ்வைப் படம் பிடிக்க முயன்றபோது ஒருவிதமான பரபரப்பு ஏற்பட்டது. சோதனையின் முடிவில் சந்தேகத்திற்குரிய பொருட்கள் எதுவும் கண்டறியப்படாத நிலையில், கனிமொழி எம்.பி தனது பயணத்தைத் தொடர்ந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்