
முதலமைச்சர் பிரசார வாகனத்தில் அதிரடி சோதனை.!ஸ்டாலின் காருக்குள் நுழைந்த பறக்கும் படை அதிகாரிகள்.!
முதலமைச்சர் வாகனத்தில் அதிரடி சோதனை! தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, தஞ்சாவூரில் இருந்து திருவாரூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் வாகனத்தைத் தஞ்சை அருகே உள்ள சாலியமங்கலத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மறித்தனர். அதிநவீன பாதுகாப்புடன் வந்த முதலமைச்சரின் காரை அதிகாரிகள் முழுமையாகச் சோதனையிட்டனர். காரின் உட்பகுதி மற்றும் பொருட்கள் வைக்கும் இடங்களை ஆய்வு செய்த பின், சந்தேகத்திற்கிடமான பொருட்கள் ஏதும் இல்லாததால் வாகனம் செல்ல அனுமதிக்கப்பட்டது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்தச் சோதனை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.