
புதிய ஆட்சி மாறிய பிறகும் வடசென்னையில் ஒரு மாற்றமும் இல்லை ! சிபிஐ(எம்) பி. சண்முகம் பேட்டி
சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI-M) மாநிலச் செயலாளர் பி. சண்முகம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, புதிய தலைமைச் செயலகக் கட்டுமானம், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகார நடவடிக்கை மற்றும் மாநிலத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய சமூக அரசியல் பிரச்சினைகள் குறித்துத் தனது கருத்துக்களையும் கட்சியின் நிலைப்பாட்டையும் விரிவாக எடுத்துரைத்தார். மாநிலத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளில் அரசு விரைந்து கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.