
தர்மேந்திர பிரதான் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்!" - நீட் விவகாரத்தில் திருமாவளவன் பேட்டி
சென்னை தியாகராய நகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி (VCK) தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய அரசைக் கடுமையாகச் சாடிய அவர், உடனடியாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த அவர், மேகதாட்டு அணை விவகாரம் மற்றும் 'ஜனநாயகன்' திரைப்படம் குறித்தும் தனது காட்டமான கருத்துக்களைப் பதிவு செய்தார்.