கொங்கு மண்டலம் முழுவதும் எங்களுக்குதான்.....தோல்வி பயம் வந்துட்டு முதல்வருக்கு - நயினார் நாகேந்திரன்

Share this Video

ஈரோட்டில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், வரவிருக்கும் தேர்தலில் கொங்கு மண்டலம் முழுவதும் தங்களின் கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு உள்ளதாக மிகுந்த தன்னம்பிக்கையுடன் தெரிவித்தார். கொங்கு மண்டலம் எப்போதும் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் கோட்டையாக இருந்து வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், இந்த முறை அனைத்து இடங்களையும் கைப்பற்றுவோம் என உறுதிபடக் கூறினார். அதேபோல், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்குத் தேர்தல் தோல்வி பயம் வந்துவிட்டதாக அவர் விமர்சித்தார். தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் கஞ்சா புழக்கம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தத் தவறிய முதலமைச்சர், தற்போது தோல்வியைக் கண்டு அஞ்சுவதாகக் குறிப்பிட்ட அவர், மக்கள் மாற்றத்தை விரும்புவதாகவும் தெரிவித்தார். மேலும், அண்ணாமலை அவர்கள் கொங்கு மண்டலத்திலேயே போட்டியிடுவார் என்றும், தாங்கள் அனைவரும் இணைந்து எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதலமைச்சர் ஆக்குவதே இலக்கு என்றும் நயினார் நாகேந்திரன் தனது உரையில் தெளிவுபடுத்தினார்.

Related Video