"70 ஆண்டுகால வைகை அணை பிரச்சினைக்கு 2 மாதங்களில் தீர்வு!" — அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் ஆய்வு!

Share this Video

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணை கட்டப்பட்டு 70 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையில், அங்கு பெருமளவில் மணல் மற்றும் வண்டல் மண் தேங்கியுள்ளது. இதனால் அணையின் நீர் சேமிப்பு திறன் தற்போது வெறும் 18-20% ஆகக் குறைந்துள்ளது. பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாமல் உள்ள இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் வைகை அணையில் மேற்கொள்ளப்படவுள்ள தூர்வாரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதற்கான சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் மத்திய அரசின் ஒப்புதலை தமிழக அரசு ஏற்கனவே பெற்றுள்ளது. அடுத்த இரண்டு மாதங்களுக்குள் தூர்வாரும் பணிகளைத் தொடங்கி, வரவிருக்கும் மழைக்காலத்திற்குள் அணையின் நீர் சேமிப்பு திறனை அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுமார் 4,000 விவசாயிகள் இந்த வண்டல் மண்ணை இலவசமாகப் பெறப் பதிவு செய்துள்ள நிலையில், தனியார் நபர்களுக்கு சட்டவிரோதமாக மண் விற்கப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் குறித்தும் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Related Video