
எந்த எதிர்ப்பிற்கும் அஞ்ச வேண்டாம்! - சென்னை நீட் போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி கண்டனம்!
சென்னையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) அலுவலகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக நடைபெற்ற தீவிர போராட்டத்தில் தமிழ்நாட்டின் பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் நேரில் கலந்து கொண்டார். அப்போது போராட்ட களத்தில் உரையாற்றிய அவர், மாணவர்களின் உரிமைக்காகவும், நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்புகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்தார். திமுக, அதிமுக, மதிமுக என அனைத்து கட்சி மாணவர்களும் ஒருங்கிணைந்து சட்டப்பூர்வமாகவும் உறுதியாகவும் போராட வேண்டும் என்று அழைப்பு விடுத்த அமைச்சர், மாணவர்களின் போராட்டத்திற்கு முழு ஆதரவு தெரிவித்து ஆவேசமாக உரையாற்றினார்.